தான் ஒரு சிங்கள பௌத்த தலைவர் என்றும், அதை வெளிப்படுத்த ஒருபோதும் தயங்கமாட்டேன் என்றும், என்று சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“பௌத்த போதனைகளின் படியே நாட்டை நிர்வகிக்கிறேன்.
தேசியத்தை மதிக்கும், நாட்டின் இறைமையைப் பாதுகாக்கும் ஒரு தேசிய தலைமைக்கு எதிராக தேசத்துரோக சக்திகள் அணி சேர்ந்து, தங்கள் இலக்குகளை அடைய உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் ஆதரவை நாடுகின்றன.
இவர்கள் மிகவும் நுட்பமாக பல்வேறு போலிப் பிரசாரங்கள் மூலம் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர்.
இவ்வாறான சக்திகள் குறித்து மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
தரவுகளை ஆராய்ந்து உண்மைகளை அறிந்து முடிவுகள் எடுக்கப்பட்டால் எவருக்கும் பொதுமக்களை தவறாக வழிநடத்த முடியாது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.