முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சிறிலங்காவிக்கு சென்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

219

மூன்று நாள் பயணமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சிறிலங்காவைச் சென்றடைந்துள்ளார்.

இந்தியாவுக்கு சொந்தமான விசேட விமானத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக அவர் இன்று மாலை 4.20 க்கு சிறிலங்காவைச் சென்றடைந்துள்ளார்.

அவருடன் இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் இருவரும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய  நாட்களில் அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் சந்திப்புகளை மேற்கொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தியோகபூர்வ விஜயம் 2021 ஆம் ஆண்டில் சிறிலங்காவிற்கு ஒரு உயர்மட்ட வெளிநாட்டு பிரமுகரின் முதல் வருகை என்பது  குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *