கடந்த இரண்டு நாட்களில் சிறிலங்காவில் உள்ள 2 ஆயிரத்து 456 சீனப் பிரஜைகளுக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பகா, அம்பாந்தோட்டை, புத்தளம் ஆகிய இடங்களில், சீனப் பிரஜைகளுக்கு நேற்று முன்தினமும், நேற்றும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் போதே, 2 ஆயிரத்து 456 சீனப் பிரஜைகளுக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், எவருக்கும் பக்க விளைவுகள் ஏற்பட்டவில்லை என்றும், இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள சீன பிரஜைகளுக்கு மூன்று வாரங்கள் கழித்து இரண்டாவது முறை தடுப்பூசி போடப்படும்.
சீனாவினால் ஆறு இலட்சம் சினோபார்ம் தடுப்பு மருந்து கொடையாக வழங்கப்பட்டுள்ள போதும், அவை தற்போது சீனப் பிரஜைகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தைப் பயன்படுத்து இலங்கை தேசிய மருந்துகள் ஒழுங்கமைப்பு அதிகார சபை இன்னமும் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.