சிறிலங்காவில் மனித உரிமைகள் விவகாரத்தில், அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம் அழுத்தங்களைக் கொடுக்கும் என்று அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சிறிலங்காவில் உண்மையான அமைதியை ஏற்படுத்துவதற்கு, ஏனைய நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா தொடர்ந்து பணியாற்றும் என்றும், அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மீண்டும் அமெரிக்கா இணைந்து கொள்ளுமா என்ற கேள்விக்கு அவர், அதுகுறித்து இப்போது கூறுவது பொருத்தமல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.