சிறிலங்காவில் மேலும் 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 259 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் தொற்று உறுதியானவர்களில் 6 ஆயிரத்து 398 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்தோடு கொரோனா தொற்று சந்தேகத்தில் 603 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் 240 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.