சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆறு இலட்சம் சினோபார்ம் தடுப்பூசி மருந்துகள், ஒரு வாரத்துக்குள் சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் என்று கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள சீனத் தூதரகப் பேச்சாளர் ஒருவர், இந்த மருந்துகள் சீனாவினால் கொடையாகவே வழங்கப்படுகின்றன என்றும், அதனால் இவற்றை சீனர்களுக்கு முன்னுரிமை அளித்து வழங்குமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் கோருகின்ற அதிகாரம் சீனாவுக்கு கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும், சிறிலங்கா அரசாங்கம், நாட்டில் வசிக்கும் சில ஆயிரம் சீன நாட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசிகளை செலுத்த முன்வந்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.