சிறிலங்காவுக்கு மேலும் மூன்று இலட்சம் கொரோனா தடுப்பு மருந்துகளை கொடையாக வழங்கவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட மூன்று இலட்சம் சினோபார்ம் கொரோனா தடுப்பு மருந்துகளை சிறிலங்காவுக்கு கொடையாக வழங்கவுள்ளதாக சீனா ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில், சீனாவிடம் இருந்து 6 இலட்சம் சினோபார்ம் கொரோனா தடுப்பு மருந்துகள் கிடைக்கவுள்ளன.
எனினும், சினோபார்ம் தடுப்பு மருந்தை சிறிலங்காவில் பயன்படுத்துவதற்கு இன்னமும் முறையான அனுமதிகள் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.