முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சிறுநாவற்குளம் பகுதியில் இரு இளம் குடும்தலைவர்கள் விபத்தில் பலி

262

மன்னார் – மதவாச்சி வீதியில், சிறுநாவற்குளம் பகுதியில் நேற்று மதியம் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இரு இளம் குடும்பத் தலைவர்கள் உயிரிழந்துள்ளனர்.

செட்டிக்குளத்தில் இருந்து மன்னார் நோக்கி இவர்கள் பயணம் செய்த உந்துருளி, வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நின்ற பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில், ஒருவர் அதேஇடத்தில் உயிரிழந்துள்ளார் என்றும், மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என்றும்  தெரிவிக்கப்படுகிறது.

செட்டிகுளத்தில் மரண சடங்கு ஒன்றில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்கள், 36 மற்றும் 38 வயதுடையவர்கள் என்றும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளை திருமணம் செய்து கொண்டவர்கள் என்றும் கூறப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *