சீனாவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த பத்து தொழிலாளர்களின் சடலங்களை மீட்பு படையினர் மீட்டுள்ளனர்.
சீனாவின் தங்கம் உற்பத்தி செய்யும் பிராந்தியமான கிக்ஸியாவில் உள்ள ஹுஷான் சுரங்கத்தில் ஜனவரி 10 ஆம் திகதி வெடி விபத்து ஏற்பட்டது.
இதனால் சுமார் 600 மீட்டர் நிலத்தடியில் பணிபுரியும் 22 சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இவர்களில் ஒருவர் பலத்தகாயங்களுடன் கோமா நிலைக்குச் சென்றுள்ள நிலையில் 11பேர் உயிருடன் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.