சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு கனேடியர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் இன்று ஆரம்பமாகியுள்ளன.
இன்று நடந்த விசாரணையின் போது, தமது தூதரக அதிகாரிகள் அனுமதிக்கப்படவில்லை என்று கனடா அறிவித்துள்ளது,
இரண்டு மணிநேரம் நடந்த விசாரணைகளுக்குப் பின்னர் வெள்ளிக்கிழமை நண்பகல் வழக்கு நிறைவுக்கு வந்ததாக, கனேடியர்களின் சார்பில் முன்னிலையான சட்டவாளர் கூறியதாக கனடா தூதரகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், தீர்ப்பு எதுவும் இன்று அறிவிக்கப்படவில்லை என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக விபரங்களை வெளியிடுவதற்கு அவர் மறுத்துள்ளார்