சுவீடனின் சுற்றுக்சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பேர்க் மீது டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, சுவீடனின் சுற்றுக்சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பேர்க் தொடர்ந்து கீச்சக பதிவுகளை இட்டு வருகிறார்.
இந்த நிலையிலேயே அவர் மீது டெல்லி காவல்துறையினரால், சதி மற்றும் குழுவினருக்கு இடையே பகைமையை வளர்ப்பதற்கான முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும், வழக்கு தொடர்ந்தாலும் அமைதியான முறையில் போராடும் விவசாயிகளுக்கான தனது ஆதரவு தொடரும் என கிரேட்டா தன்பேர்க் கீச்சகத்தில் பதிவிட்டுள்ளார்.