பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியை (Jamal Kashoki) கொலை செய்வதற்கு சவுதி இளவரசர் உத்தரவிட்டதாக அமெரிக்க புலனாய்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி, (Jamal Kashoki) அமெரிக்காவின் வொஷங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசாங்கத்தையும் அந்நாட்டு மன்னர் மற்றும் பட்டத்து இளவரசரையும் விமர்சித்து செய்திகள் மற்றும் கட்டுரைகளை எழுதி வந்தார்.
இந்நிலையில் துருக்கி பெண் ஒருவரை ஜமால் கஷோக்கி திருமணம் செய்ய முடிவு செய்தார். இதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரக அலுவலகத்துக்கு ஆவணங்களை பெறுவதற்காக சென்றார்.
அதன் பின்னர் அவர் சடலாமாகவே மீட்கப்பட்ருந்தார். இந்நிலையில் அவரது கொலை தொடர்பிலான ஆய்வுகள் மற்றும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு தற்போது அமெரிக்க புலனாய்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கொலை நடந்த முறையே சவுதி இளவரசர் பின்னணியை உணர்த்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளமையை சவுதி அரேபிய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.