முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஜெயலலிதாவின், நினைவிடம் எதிர்வரும் 27இல் திறக்கப்படுகிறது

226

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், நினைவிடம் எதிர்வரும் 27 ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சென்னை மெரீனா கடற்ரையில், எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடம், வரும் 27 ம் திகதி காலை 11 மணியளவில் முதல்வர் பழனிசாமியினால் திறந்து வைக்கப்படும் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்க உள்ளார்.

சட்டசபை தலைவர், அமைச்சர்கள்,  நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், இதில்  கலந்து கொள்ளவுள்ளனர் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதேவேளை, இந்த நினைவிட திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை புதுடெல்லி சென்றுள்ள, தமிழக முதல்வர் பழனிச்சாமி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கியுள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *