குடியரசு தின மற்றும் இராணுவ தின அணிவகுப்புகளுக்காக டெல்லிக்குச் சென்றுள்ள, 150 இந்திய இராணுவத்தினருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜனவரி 26ம் திகதி குடியரசு தின அணிவகுப்பும், ஜனவரி 15ஆம் திகதி இராணுவ தின அணிவகுப்பும் டெல்லியில் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த அணிவகுப்புகளில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த இராணுவ வீரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும், டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.