முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தடுப்பூசி செலுத்திக் கொண்ட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, விசாரணைகள்

230

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கம்பகா மாவட்டத்தில் திவுலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய ஒருவர், இரண்டு நாட்களுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், திடீர் சுகவீனமடைந்து நேற்று மரணமடைந்துள்ளார்.

மேலும் ஒருவர் கம்பகாவில் உயிரிழந்துள்ள போதும், அவர் பற்றிய தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.

இவர்களின் மரணங்களுக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு உள்ளதா என்று தொற்று நோயியல் பிரிவு விசாரணைகளை நடத்தி வருகிறது.என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் மேலும் கூறியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *