முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தமிழகத்தில் இன்றும் நாளையும் கடும் மழை பெய்யும்

193

மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் வலுவிழந்தமையால் தமிழகத்தில் 2 நாள்களுக்கு மழை நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மேலும் வலுவிழந்து, இராமநாதபுரம் வழியாக மேற்கு-தென்மேற்கு திசையில் தெற்கு கேரள பகுதியை நோக்கி செல்லவுள்ளது.

இதன்காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் மிதமான மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய பலத்தமழை முதல்  மிக பலத்த மழையும், திருவள்ளூா், சென்னை, காஞ்சிபுரம், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *