முக்கிய செய்திகள்

தமிழகத்தில் ஒரேநாளில் 30ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள்

209

தமிழகத்தில் ஒரே நாளில் கொரொனா தொற்றுக்கு இலக்கானோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1 இலட்சத்து 58 ஆயிரத்து 129 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 30 ஆயிரத்து 621பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 இலட்சத்து 99 ஆயிரத்து 485ஆக அதிகரித்து உள்ளது.

அதேவேளை, 297 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 768 ஆக அதிகரித்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *