முக்கிய செய்திகள்

தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயற்படுகிறது; முதலமைச்சர் ஸ்டாலின்

239

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயற்பட்டு வருவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலக வளாகத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, ‘கொரோனாவை தடுக்க தமிழக அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

எனது தலைமையிலான அரசில் வெளிப்படைத்தன்மை இருக்கும் எனக் கூறியிருந்தேன்.

அனைத்து கட்சிகளின் ஆலோசனைகளை பெறவே இந்தக் கூட்டத்தில் இணைந்திருக்கிறோம். நோய் தொற்று அதிகரித்து வருவதை கருத்திற்கொண்டு கூடுதல் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *