முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தமிழர்களுக்கு நீதியையும், தீர்வையும் வழங்குவது சர்வதேச சமூகத்தின் கடமையாகும்.

177

சிறிலங்கா அரசு பொறுப்புக்கூறும் வகையிலும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையிலும், போர்க்குற்றவாளிகளுக்குத் தண்டனையை வழங்கும் வகையிலும், புதிய பிரேரணை அமைய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

“போர் முடிந்து 11 ஆண்டுகள் கடந்து விட்டன. எனவே நீதிக்காகவும், தீர்வுக்காகவும் ஏங்கிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு நீதியையும், தீர்வையும் வழங்குவது ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் பிரதான கடமையாகும்.

பிரித்தானியா சில நாடுகளுடன் இணைந்து சிறிலங்கா மீது முன்வைக்கவுள்ள பிரேரணையை வலுவாக்கிச் சமர்ப்பிக்க வேண்டும்.

அனைத்து உறுப்புரிமை நாடுகளும் அதற்கு ஆதரவு வழங்க வேண்டும்” என்றும் இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *