தமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைப் போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன் என, நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி, பேரினவாத கட்சிகளுடனான அரசியல் கூட்டுக்கு விலையாக, இங்குள்ள தமிழரின் போராட்டத்தை பயங்கரவாதமாக வர்ணித்தது.
சிறிலங்கா கம்யூனிஸ்ட்களின் இந்த வறட்டுவாதத்தை ஏற்கும் மனநிலையில் இந்திய கம்யூனிஸ்டுகள் ஆரம்பத்தில் இருந்தார்கள்.
இதை நிராகரித்து, தமிழர் போராட்டத்தை, ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலை போராட்டமாக அங்கீகரித்து ஆதரவளித்தவர், தோழர் பாண்டியன்” என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.