முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தில் மீண்டும் தீவிரவாத சக்தி உருவாகும் நிலை; மங்கள

212

தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மீண்டுமொரு புதிய தீவிரவாத சந்ததியை உருவாக்கும் நோக்கில் அரசாங்கம் செயற்படுகின்றது என மங்கள சமரவீர கடுமையாக சாடியுள்ளார்.

முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர் வெளியிட்டுள்ள கீச்சகப் பதிவிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெரும்பான்மையினரின் மதவெறிக்கு அடிபணிந்து இறந்தவர்களை அடக்கம் செய்ய முடியாமால் முஸ்லிம்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்றே தற்போது உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்குத் தமிழர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *