முக்கிய செய்திகள்

தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு

200

வரும் 14ஆம் நாள் தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும், இது வரும் 16ஆம் நாள் புயலாக வலுப்பெறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் உருவானால் வடமேற்குப் பகுதியில் நகர்ந்து, கிழக்கு மத்திய அரபிக் கடலில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக, தென் தமிழகம், கேரளா மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அரபிக் கடலுக்கு சென்ற மீனவர்கள் வரும் 14ஆம் நாளுக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *