கனடாவில் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்லும் நிலைமையையே வரைவு காண்பித்துள்ளதாக தலைமை வைத்தியர் தெரேசா டாம் (THERESHA TAM) தெரிவித்துள்ளார்.
பொதுசுகாதாரத்துறையின் முறையான நடவடிக்கைகள் வெற்றி கண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் முழுமையான அச்சம் நீங்கிவிட்டது என்று பொருள் கொள்ளக் கூடாது என்றும் குறிப்பிட்ட அவர்பாதுகாப்பு விதிமுறைகளை தொடர்ச்சியாக பேண வேண்டும் என்றும் கோரினார்.
அத்துடன் பிரித்தானியா, தென்னாபிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள உருமாரிய வைரஸின் தாக்கம் 148பேர் வரையிலே பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.