முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

நல்லூரில் இன்று இரண்டாவது நாளாகவும் உணவுதவிர்ப்புப் போராட்டம்

232

இனப்படுகொலைக்கு நீதி கோரி, நல்லூரில் இன்று இரண்டாவது நாளாகவும் உணவுதவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இனப்படுகொலைக்கு நீதி கோரி பிரித்தானியாவில் வசிக்கும் அம்பிகை செல்வகுமார், சாகும்வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை லண்டனில் நேற்று முன்தினம் ஆரம்பித்திருந்தார்.

அவரது போராட்டத்தை வலுப்படுத்தும் வகையில், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று காலை நல்லூரில் முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை நேற்று ஆரம்பித்தனர்.

இந்தப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து வரும் நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றுள்ளனர்.

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் ஊடாக சிறிலங்கா அரசாங்கத்தின் போர்க் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இனத்திற்கு எதிராக இனவழிப்பு என்பவற்றுக்கு சர்வதேச நீதி  வழங்கப்பட வேண்டும், தமிழ் இனத்தின் மீதான இன அழிப்பு தொடராது இருப்பதற்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும்  ஆகிய கோரிக்கைகளையும்  முன்வைத்து இந்த  உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *