முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

நாட்டின் இறையாண்மையை சீனாவிடம் ஒப்படைக்கவில்லை

354

நாட்டின் இறையாண்மையை சீனாவிடம் ஒப்படைக்கவில்லை சிறிலங்கா சிறிலங்காவின் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் கொரோனா நிவாரண மற்றும் செலவுப் பொதி சட்டத்தில் சிறிலங்காவுக்கான உதவிகளை வழங்குவதற்கு, விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் தொடர்பான கேள்விக்கே அவர் இவ்வாற பதிலளித்துள்ளார்.

 “ சீனா அல்லது இந்தியா உள்ளிட்ட எந்த நாட்டிடமும் சிறிலங்கா தனது இறைமையை சரணடையவில்லை.

எமது இறையாண்மையைப் பற்றி நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம்.

எந்தவொரு நாடும் அதை எங்களுக்கு குறிப்பாக சொல்ல வேண்டியதில்லை. இறையாண்மையை சரணடையும் எண்ணம் எமக்கு இல்லை.

அமெரிக்க சட்டம் தொடர்பான அறிக்கை குறித்து, அறிந்துள்ள போதும்,  அதில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியாது.

அதனைப் படித்து ஆராயாமல், இதுபற்றி எந்தக் கருத்தையும் கூற முடியாது.

இந்த நிபந்தனைகள் தொடர்பாக எந்தவொரு வழியிலும், இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் தரப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *