சிறிலங்காவில் நிகாப் மற்றும் புர்கா மீதான தடை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மற்றும் சிறிலங்கா முஸ்லிம்களின் உணர்வுகளை காயப்படுத்தும் ஒரு சம்பவம் என சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாத் கட்டாக் தெரிவித்துள்ளார்.
தனது கீச்சகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘சிறிலங்காவில் புர்கா மீதான தடை உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் உணர்வுகளுக்கும், சிறிலங்காவில் உள்ள முஸ்லிம்களின் உணர்வுகளுக்கும் காயத்தை ஏற்படுத்தும். சர்வதேச அரங்குகளில் நாடு எதிர்கொள்ளும் தொற்றுநோய் மற்றும் பிற சவால்களால் பொருளாதாரம் பாரிய நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், பாதுகாப்பு என்ற பெயரில் இத்தகைய பிளவுபடுத்தும் நடவடிக்கைகள், பொருளாதார சிக்கல்களை அதிகரிப்பதைத் தவிர, அடிப்படை மனித உரிமைகள் குறித்த பரந்த அச்சங்களை மேலும் வலுப்படுத்த மட்டுமே உதவும்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்