இலங்கையில் குற்றப்புலனாய்வுத் துறையின் பொறுப்பதிகாரி நிசாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டமையை அனைத்துலக மன்னிப்புசபை கண்டித்துள்ளது.
இந்த இடமாற்றத்தின் மூலம் நடப்பு விசாரணைகளில் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்று அனைத்துலக மன்னிப்புச் சபையின் தெற்காசிய ஆய்வாளர் தேவகி ருவன்பத்திரன கோரியுள்ளார்.
இந்த நிலையில் முக்கிய மனித உரிமை மீறல்கள் மற்றும் பொதுமக்கள் காணாமல் போனமை தொடர்பான விசாரணைகளில் அதிகாரிகளின் தலையீடு குறித்து தாம் கவனம் செலுத்துவதாகவும் மன்னிப்புசபையின் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நடைமுறை விசாரணைகளில் தடங்கல் ஏற்படக் கூடாது எனவும், வழக்குகளில் தாமதம் ஏற்படுத்தப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.