முக்கிய செய்திகள்

நினைவேந்தலுக்கு தடைவிதிக்க கோரும், கோப்பால் காவல்துறையின் மனு நிராகரிப்பு

223

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரிய கோப்பாய் காவல்துறையினரின் விண்ணப்பம் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தல் நிராகரிக்கப்பட்டுள்ளது.

நினைவேந்தலை தடுக்கக் கோரும் ‘ஏ’ அறிக்கையை தாக்கல் செய்யாது சட்டம் மீறப்பட்டதாக கண்டறியப்பட்டால் பி அறிக்கையில் தாக்கல் செய்யுமாறு யாழ்ப்பாணம் நீதிவான் பீற்றர் போல் உத்தரவிட்டார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை கோப்பாய் காவல்துறை பிரிவில் தடை செய்யக் கோரி காவல்துறையினர் இன்று ‘ஏ’ அறிக்கையில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

குற்றவியல் சட்டம் 106 ஆம் பிரிவு மற்றும் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த ‘ஏ’ அறிக்கையை கோப்பாய் காவல்துறையினர் முன்வைத்தனர்.

நினைவேந்தல் நிகழ்வுகளால் சட்டம் மீறப்பட்டதாகக் கண்டறியப்பட்டால் பி அறிக்கையின் கீழ் விண்ணப்பம் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிவான், கோப்பாய் பொலிஸாரால் தடை கோரிய ‘ஏ’ விண்ணப்பத்தை நிராகரித்தார்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *