ரஞ்சன் ராமநாயக விவாகரத்தில் நீதிமன்ற அவமதிப்பு விடயத்தில் முறையான சட்டங்கள் இயற்றாத காரணத்தினாலேயே நேர்மையான அரசியல்வாதி ஒருவர் தண்டிக்கப்பட்டுள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, எதிர்கட்சியினர் ரஞ்சன் ராமநாயக வை நாடாளுமன்றத்திற்கு அழைக்காதமை குறித்து சபாநாயகரிடம் கேள்வி எழுப்பிய வேளையில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய சுமந்திரன் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக வை நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்பு தொடர்பான தமது கருத்தினை முன்வைத்தார்.
இதன்போது, சாதாரண தேசிய சட்டங்கள் நீதிமன்ற அவமதிப்பு விடயங்களில் இயற்றப்படாததும், ரமநாயக்கவின் கூற்றுகள் ஆங்கில சட்டத்தில் நீதிமன்ற அவதூறாக கணிக்கப்படுவதில்லை என்பதனை பொருட்படுத்தாததுமே இத்தகைய தீர்ப்போன்று வழங்கப்படுவதற்கு காரணமாகும் என்றார்.