ரொரன்ரோ – நெடுஞ்சாலை 27 அருகே, Rexdale பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட விபத்து ஒன்றையடுத்து வாகனம் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்ற விபத்தின் போது. ஒரு வாகனம் வீதி சமிக்ஞை கம்பத்தில் மோதியுள்ளது.
அதேவேளை, மற்றொரு வாகனம் தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இன்னுமொருவர் காயமடைந்துள்ளார்.
இதையடுத்து குறித்த வீதி மூடப்பட்டு, சமிக்ஞைக் கம்பத்தை திருத்தும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.