யாழ்ப்பாணம்- மல்லாகம் பகுதியில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் நேற்றிரவு வாள்வெட்டுத் தாக்குதலுக்கு உள்ளாகி, படுகாயமடைந்துள்ளார்.
மல்லாகம் சந்திக்கு அண்மைய பகுதியில் நேற்றிரவு 9.30 மணியளவில் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது,
உந்துருளியில் சென்ற மூவரைக் கொண்ட குழுவே, ஆசிரியர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.