முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

பஞ்சாப் மாநிலத்தில் இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழப்பு – 15பேர் காயம்

1124

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இன்று மாலை பஞ்சாப் மாநிலத்தின் பதின்டா என்ற நகரில் இடம்பெற்ற காங்கிரஸ் பிரச்சார கூட்டம் நடைபெற்ற இடத்தின் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த மாருதி காரில் இருந்து குண்டு வெடித்ததாகவும் இதனால் அருகில் நின்ற சிறுவன் ஒருவர் உட்பட உள்பட மூவர் உயிரிழந்ததுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பஞ்சாபில் எதிர்வரும் 4 ஆம் திகதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *