பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள உணவு தவிர்ப்புப் போராட்டம் மேலும் வலுப்பெற வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நல்லூரில் 8வது நாளாக நேற்று சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றிருந்த மாணவர்களைச் சந்தித்து கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சி.வி.விக்னேஸ்வரன், மக்கள் ஒழுங்கு செய்யும் சிறு சிறு போராட்டங்கள் ஊடாக அதற்கான அழுத்தத்தினை பிரயோகிக்க முடியும் என்று தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் போராட்டம் மேலும் வலுப்பெற்று, சர்வதேச விசாரணையை சர்வதேச அரங்கில் வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.