ரொரன்ரோ- சன்னிசைட் அவென்யூவில் (Sunnyside Avenue) உள்ள பழைமையான தேவாலயத்தில் நேற்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
அதிகாலை 4.30 மணியளவில் தேவாலயத்தின் ஒரு பகுதியில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து, தீயணைப்பு துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து விரைந்து சென்ற தீயணைப்பு பிரிவினர், துரிதமாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுடு வந்துள்ளனர்.
எனினும், சுவர் பகுதியில் சில இடங்களில் தீயை முழுமையாக கட்டுப்படுத்த குறிப்பிட்ட நேரம் தேவைப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீவிபத்தினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது