முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

பாகிஸ்தன் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதங்கள் நிலவுகின்றன

454

பாகிஸ்தானில் நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகும் என்று எதிர்பாத்த நிலையில், முடிவுகளை அறிவிப்பதில் தாமதங்கள் நிலவுகின்றன.

எனினும் இந்த தேர்தலில் முன்னாள் துடுப்பாட்ட வீரர் இம்ரான்கானின் தெரிக்-இ-இன்சாப் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

272 நடாளுமன்ற தொகுதிகளை கொண்ட பாகிஸ்தானில், பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிப்பதற்கு 137 தொகுதிகளில் வென்றாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 114 தொகுதிகளில் தெரிக்-இ-இன்சாப் கட்சியும், 57 இடங்களில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும், பிலாவல் பூட்டோவின் கட்சி 36 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1996ல் கட்சி தொடங்கிய இம்ரான்கான் இதுவரை பொது தேர்தல்களில் பெரியளவில் வெற்றியை பதிவு செய்யாத நிலையில், தற்போது கிடைத்துள்ள வெற்றியை அந்த கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

அதேவேளை வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதால் இந்த தேர்தல் முடிவுகளை ஏற்கப்போவதில்லை என்றும், தேர்தல் முடிவுகளை எதிர்த்து பல கட்சிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்த உள்ளதாகவும் நவாஸ் ஷரீப் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தேர்தலில் எவ்வித முறைககேடும் நடைபெறவில்லை என்றும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *