ஒன்ராரியோவின் Scarborough இல் உள்ள பொது பாடசாலையொன்று மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலைச் சமூகத்தைச் சேர்ந்த அறுவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து இவ்வாறு காலவரையின்றி பாடசாலை மூடப்பட்டுள்ளது.
அத்துடன் பாடசாலையில் ஏனைய ஊழியர்கள், மற்றும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனையை மேற்கொள்வது தொடர்பில் பாடசாலை நிருவாகம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இதேவேளை இந்தப் பாடசாலைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக அறிவிப்பை விடுத்து தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் பாடசாலை நிருவாகம் கோரியுள்ளது.