முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

பிணையில் விடுதலையானர் ஜம்புரேவல சந்தரரதன தேரர்

216

கொழும்பு – கோட்டையில் இன்று முற்பகல் இடம்பெற்ற போராட்டத்தின்போது, சட்டவிரோதமாக ஒன்று கூடியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சிங்களே அபி தேசிய அமைப்பின் பொதுச்செயலாளரான, ஜம்புரேவல சந்தரரதன தேரர் உட்பட 2 பேர் காவல்துறை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்

சட்ட விரோத ஆர்ப்பாட்டத்தின் போது, காவல்துறை ஜீப் ஒன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காவல்துறை ஜீப்பைத் தாக்கியதாகவும் தேரர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தேரரிடத்தில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *