தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்த முடியாது. ஏனென்றால், குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டம், மாநில அரசின் வசம் உள்ளது. எனவே இது தொடர்பாக புகார்கள் வருமானால் அரசினால் நடவடிக்கை எடுக்க முடியும். என்று அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதிப்புக்கு உள்ளானோர் போன்றவர்கள் வாக்குச்சாவடிக்கு வராமல் வீட்டில் இருந்தபடி தபால் வாக்குகள் அளிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதற்கான விண்ணப்பத்தை ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 738 எண்பது வயதுக்கு மேற்பட்டோரும், 38 ஆயிரத்து 324 மாற்றுத்திறனாளிகளும் வழங்கியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.