ஜோ பைடன், பில் கேட்ஸ் போன்ற பிரபலங்களின் கீச்சக கணக்குகளை முடக்கி, மோசடி செய்த இளைஞனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் என பல பிரபலங்களின் கீச்சக கணக்குகளை முடக்கி, அதன் மூலம் 1 இலட்சத்து 17 ஆயிரம் டொலர் மோசடி செய்த 18 வயதான இணைய முடக்கி ஒருவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
17 வயதாக இருந்த போது, கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன், சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதை அடுத்து, நீதிமன்றம் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.