இந்தியாவின் ‘பிரமோஸ் சூப்பர்சோனிக்’ எனப்படும் ஏவுகணை இன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அது வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.
இந்தியா – ரஷியா கூட்டு தயாரிப்பான அந்த ஏவுகணை, கிட்டத்தட்ட 2,000 கிலோகிராம் எடை கொண்டது என்றும், 200 கிலோகிராம் வெடிப் பொருளுடன் 290 கிலோ மீட்டர் தூரம் வரை தரைக்கு மேல் பறந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்டது எனவும் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை முதல் முறையாக கடந்த 2001ஆம் ஆண்டும், அதன் பின்னர் 2003ஆம் ஆண்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் பல்சோரி என்ற இடத்திலிருந்து கிட்டத்தட்ட 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சாந்திப்பூர் கடல் பகுதியில் இன்று காலை 10.15 மணியளவில் குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.