பிரான்சில் காலேஸ் பகுதியிலிருந்த ஏதிலிகள் முகாம்கள் முழுமையாக அகற்றும் பணி தற்போது தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஏதிலிகள் பலர் பிரான்ஸ் தலைநகருக்கு படையெடுத்துள்ளனர். இதே சமயம் பாரிஸ் நகரத்தின் மத்தியில் உள்ள சட்டவிரோதமான கூடாரங்களை அதிகாரிகள் போலீசார் உதவியுடன் அகற்றியுள்ளனர்.
கூடாரங்கள் அகற்றபட்ட சில மணி நேரத்தில் பாரிஸின் ஸ்டேல்லிங் தெருவில் ஏதிலிகள் குழுக்களாக கம்புகளுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கலவரத்தில் ஈடுபட்ட காரணம் வெளியாகவில்லை. இந்த சம்பவத்தால் பாரிஸ் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.