முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

பிரான்ஸில் மூன்றாவது முறையாக நாடு தழுவிய ஊரடங்கு

223

கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் தீவிரமடைந்ததன் காரணமாக, பிரான்ஸில் மூன்றாவது முறையாக நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தற்போது 19 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு, எதிர்வரும் சனிக்கிழமை முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் எனவும் கல்வி நிலையங்கள் மூன்று வாரங்களுக்கு மூடப்படுவதாக ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

இரவு 7 மணிமுதல் ஊரடங்கு அமுலாக்கப்படவுள்ளதோடு தொழிலாளர்கள் வகைப்படுத்தப்பட்டு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தற்போது 19 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ளது போன்று நாடு முழுவதும் உள்ள அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது.

மே மாத நடுப்பகுதியிலிருந்துஇ நாடு மீண்டும் வழமைக்குதத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு அம்மாத நடுப்பகுதியில் இருந்து தற்போது மூடப்பட்டுள்ள வர்த்தக நிலையங்கள், வர்த்தக மையங்கள் என்பன மீளத்திறப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *