முக்கிய செய்திகள்

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸிக்கு ஒரு வருட சிறைத்தண்டனை

3322

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸிக்கு (Nicolas Sarkozy) பாரீஸ் நீதிமன்றம் ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை பிரான்ஸ் ஜனாதிபதியாக இருந்த நிக்கோலஸ் சர்கோஸி(Nicolas Sarkozy) , 2012ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, முறைகேடாக நிதியுதவி பெற்றதாக பாரீஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிரசாரத்தின் போது அதிக பணம் செலவு செய்யப்பட்டது சர்கோஸிக்கு தெரிந்திருந்தது என்றும், ஆனால், அவர் அதனைக் கண்டுகொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து, இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், சர்கோஸிக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
எனினும், அவர் சிறை செல்வதற்கான வாய்ப்பு இல்லை எனவும், தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய உள்ளதால், தண்டனை நிறுத்தி வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

மற்றொரு ஊழல் வழக்கில், கடந்த மார்ச் மாதம் சர்கோஸிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *