யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக பிரித்தானியாவினின் மனித உரிமைகள், வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி அமைச்சர் தாரிக் அஹமட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கீச்சகப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர், சிறிலங்காவின் மோதலில் துன்பகரமான விதத்தில் பலியானவர்களை நாங்கள் அனைவரும் நினைவில் வைத்திருப்பது அவசியம் என தெரிவித்துள்ளார்.
இது கடந்த காலத்தின் காயங்களை ஆற்றுவதற்கும், நல்லிணக்கத்திற்கும் உதவியாக இருக்கும் எனவும் பிரித்தானிய அமைச்சர் தாரிக் அஹமட் மேலும் கூறியுள்ளார்.