பிரித்தானியாவில் பாரிய பனிப்புயல் தாக்கும் ஆபத்து உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், மழையும் பனியுமாக பெரும் பாதிப்பு ஏற்படும், என்றும், ஸ்கொட்லாந்தில் -15 டிகிரி மற்றும் பிரித்தானியாவில் -6 டிகிரி செல்ஷியஸாக வெப்பநிலை குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் 5 சென்டி மீட்டர் அளவுக்கும், உயரமான பகுதிகளில் 40 சென்டி மீட்டர் அளவுக்கும் பனிப்பொழிவு இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிராமப் பகுதிகள் துண்டிக்கப்படலாம் என்றும், வாகன ஓட்டுனர்கள் மோசமான சூழல் மற்றும் தாமதங்களை சந்திக்க நேரிடலாம் என்றும், மின்சாரம் துண்டிக்கப்படலாம் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
மோசமான வானிலை காரணமாக பெரு வெள்ளம் ஏற்படலாம் என்றும், 200 இடங்களுக்கு பெரு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆராய்ச்சி மையம் மேலும் தெரிவித்துள்ளது.