முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

பிரித்தானியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ் தொற்றாளர்கள் எவரும் சிறிலங்காவில் இல்லை

325

பிரித்தானியாவில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள வீரியம்மிக்க கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் எவரும் சிறிலங்காவில் கண்டுபிடிக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவை அடுத்து, ஏனைய பல ஐரோப்பிய நாடுகளில்,இந்த புதிய வைரஸ் இனங்காணப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வோர் மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்றும், அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

பிரித்தானியாவில் இருந்து திரும்பிய இரண்டு பேர் புதிய வகை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, வெளியான தகவல்களில் உண்மையில்லை என்றும், சுகாதார அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் இருந்து திரும்புவோர், கண்டிப்பாக 14 நாட்கள், தனிமைப்படுத்தப்படுகின்றனர் என்றும், வீடுகளிலும் 14 நாட்கள் இறுக்கமான முறையில் தனிமைப்படுத்தப்படுகின்றனர் என்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *