பிளாஸ்ரிக் பொருள் பாவனையை தடைசெய்யும் தீர்மானத்தினை சமஷ்டி அரசாங்கம் மேலும் நீடிக்க வேண்டும் என்று மூன்றிலிரண்டு கனடியர்கள் விரும்புவதாக ஆய்வுத்தகவல் தெரிவிக்கின்றது.
சமஷ்டி அரசாங்கமானது எதிர்வரும் ஆண்டுடன் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையைக் தடைசெய்வதற்குரிய உத்தியோக பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே கனடியர்கள் இவ்வாறான வெளிப்பாட்டைச் செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆய்வு சுற்றுச்சூழல் மையம் உள்ளிட்ட விடயதானத்துடன் தொடர்புடைய தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.