முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்க்கப்பிடவுள்ளது.

1156

இலங்கையின் புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டமூலத்தை வெகுவிரைவில் நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில், சட்டம் ஒழுங்கு அமைச்சு, நீதியமைச்சு என்பவற்றிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதம் நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற நிலையில், அதில் கலந்துகெர்ணடு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நீதித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதும் அவசியம் எனவும், இதுகுறித்து நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவும் பேசியிருக்கும் நிலையில், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை மாற்றியமைப்பதற்காக குழுவொன்றை அமைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அந்தக் குழுவின் ஆலோசனையை அமைச்சரவைக்கு சமர்ப்பித்து, அதனை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கும் பாரப்படுத்தியுள்ளதாகவும், பயங்கரவாத தடுப்புச் சட்டம் என்று அதற்குப் பெயரிட்டுள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

அனைத்துலக மட்டத்தில் முகங்கொடுக்க முடியுமானதும், இலங்கையில் இனவாதம், மதவாதமின்றி அனைவரது உரிமைகளையும் பாதுகாக்கின்ற சட்டமாகவும் அது அமையும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

அனைத்துலக பயங்கரவாதம் மற்றும் உள்நாட்டுப் பயங்கரவாதம் என்பவற்றை எதிர்கொள்வதற்கான சிறந்த சட்டமாக இது அமைவதாகவும், அது மட்டுமன்றி பேசக்கூடிய பல பிரச்சினைகள் இதுசார்ந்து காணப்படுவதாகவும் அவர் விபரித்துள்ளார்.

இந்த சட்டம் ஒரு யோசனையாகவே இன்னும் காணப்படுகின்ற நிலையில், இந்த சட்டத்தை யோசனையாக நாடாளுமன்றத்தில் கொண்டுவருவதே அடுத்தபடியான நடவடிக்கையாக எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சாகல ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *