புதுடில்லியில் இஸ்ரேலிய தூதரகத்துக்கு அருகே இன்று மாலை 5 மணியளவில் குண்டுவெடித்ததில் 4 வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
குறைந்த சக்தி கொண்ட இந்தக் குண்டுவெடிப்பினால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற தகவல்கள் கூறுகின்றன.
இஸ்ரேலிய தூதரகம் அமைந்துள்ள பகுதியில் இருந்து, 50 மீற்றர் தூரத்தில், குண்டுவெடிப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக சம்பவ இடத்தில் காவல்துறையினர், குவிக்கப்பட்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, குண்டுவெடிப்பைத் தொடர்ந்து டெல்லி மற்றும் மும்பை வானூர்தி நிலையங்களில், பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.