பிரான்ஸிற்கும் இஸ்ரேலிற்கும் இடையில் தடையின்றிப் பயணிக்க முடியும் என்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கருத்து ஒரு தலைபட்சமான கருத்து என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
கொரோனாத் தடுப்பூசிக் கடவுச்சீட்டு தொடர்பாக, இரு நாட்டு ஒப்பந்தங்கள் எதனையும் பிரான்ஸ் இஸ்ரேலுடன் செய்யவில்லை எனவும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
பிரான்ஸிற்கும் இஸ்ரேலிற்கும் இடையில், கொரோனாத் தடுப்பூசி அத்தாட்சிக் கடவுச் சீட்டு, அல்லது, இலத்திரனியல் அத்தாட்சிப் பத்திரத்தினை நடைமுறைப்படுத்துவதன் மூலம், இந்த இரண்டு நாடுகளிற்கும் இடையில் பயணிப்பவர்கள் தடையின்றிப் பயணிக்க முடியும் என இஸ்ரேல் பிரதமர் முன்னர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.